Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரலாறு காணாத தொகைக்கு விற்பனை ஆன ‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ உரிமம்!

வரலாறு காணாத தொகைக்கு விற்பனை ஆன ‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ உரிமம்!
, வெள்ளி, 8 ஜூலை 2022 (15:30 IST)
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம்,  கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஐந்து  மொழிகளுக்கான ஆடியோ உரிமையை TIPS பிலிம்ஸ் $ மியூசிக் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமம் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட்… கிடுகிடுவென உயர்ந்த சம்பளம்...கமல்தான் நம்பர் 1!