Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் அளித்த புகார்: ஆர்.பி.சவுத்ரியிடம் விரைவில் விசாரணை

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (08:48 IST)
விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ள ஆர். பி. சௌத்ரி தமிழ்த் திரைப்பட நடிகர்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தை. 
 
இதனிடையே, வாங்கிய கடனை செலுத்திய பிறகும் உறுதி மொழி பத்திரங்களைத் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது தி.நகர் துணை ஆணையரிடம் விஷால் புகார் அளித்திருந்தார். 
 
எனவே, இந்த புகார் தொடர்பாக தொலைபேசி மூலமாக நடிகர் விஷாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments