Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது போலீஸ்! ஓவியா வெளியேற்றப்படுகிறாரா?

Advertiesment
bigboss
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (22:05 IST)
விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய டாக் ஆப் தி ஸ்டேட் என்ற நிலையில் உள்ளது. சீரியலை கூட பெண்கள் மறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஓவியாதான்.



 


ஒருவேளை ஓவியா வெளியேறிவிட்டால் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆள் இருக்காது. அதே நேரத்தில் ஓவியாவுக்கு சேனலை விட புகழ் கிடைத்துவிடக்கூடாது என்ற எண்ணமும் சேனல் பக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது
 
இந்த நிலையில் இன்று மாலை திடீரென காவல்துறை அதிகாரிகள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏதாவது புகார் வந்ததா? அல்லது பங்கேற்பாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனையா? என்று தெரியவில்லை.
 
இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் காவல்துறை அதிகாரிகளால் திடீரென ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் இறுதியில் இதுவொரு வழக்கமான விசாரணைதான் என்றும் பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதுர அடி 3500 - சினிமா விமர்சனம்