Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் வரை போன பஞ்சாயத்து... சிக்கலில் சாய் பல்லவி?

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (08:26 IST)
நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். 

 
நடிகை சாய் பல்லவி தமிழ் பெண்ணாக இருந்தாலும் மல்லுவுட்டில் அறிமுகமாகி தற்போது டோலிவுட்டை கலக்கி வரும் முன்னணில் நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவில் அதிகம் காணப்படும் சாய் பல்லவி தனது சமீபத்திய பேட்டியால் சர்ச்சையில் சிக்கினார். ஆம், அவர் நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள விராட பர்வம் படத்தின் ப்ரமோஷனின் போது பேசியது சர்ச்சைக்குள்ளானது. 
 
அவர் தனது பேட்டியில், நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். என்னை பொருத்த வரை வன்முறை என்பது தவறான விஷயம். நான் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று தான் சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன். 
 
என்னை பொருத்தவரை காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொலை மற்றும் மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகிய இரண்டிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை என கூறினார். 
 
வன்முறை எங்கு நடந்தாலும் வன்முறைதான் என பேசிய சாய் பல்லவிக்கு கண்டனங்கள் பல எழுந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் ஐதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் சாய் பல்லவி பேசிய வீடியோவை பார்த்து சட்ட ஆலோசனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments