Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விக்ரமை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி: திருச்சியில் பரபரப்பு!

Advertiesment
vikram
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:48 IST)
நடிகர் விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நடிகர் விக்ரம் நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நடிகர் விக்ரம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்
 
முதல் கட்டமாக இன்று அவர் திருச்சியில் உள்ள புரமோஷன் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் விக்ரம் ரசிகர்கள் மீது திடீரென தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விக்ரமை காண வந்த ரசிகர் கூட்டம் திடீரென நாலாபுறமும் சிதறி ஓடியதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிஷ்கின் – ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ரிலீஸ் தள்ளிப் போகிறதா?