Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்திக் சுப்பராஜ் படத்தின் பார்ட் 3 தயார் – அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

கார்த்திக் சுப்பராஜ் படத்தின் பார்ட் 3 தயார் – அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!
, சனி, 2 ஜனவரி 2021 (17:28 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான் பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.

2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பாபி சிம்ஹா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீட்சா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பீட்சா 2 என்ற படத்தை தயாரித்தார் தயாரிப்பாளர் சி வி குமார். ஆனால் முதல் பாகத்துக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் பீட்சா என்ற வெற்றிப்படத்தின் பிராண்ட் பெயரை பயன்படுத்துவது மட்டுமே குறிக்கோளாக இருந்ததாக தெரிந்தது. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு பீட்சா 3 : தி மம்மி என்ற படத்தை தயாரிக்க உள்ளார் சி வி குமார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்குகிறார். அஷ்வின் கக்குமானு, காளி வெங்கட், ரவீனா தாஹா, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கொஞ்ச காலம் பேய் படங்கள் இல்லாமல் இருந்த தமிழ் சினிமாவுக்கு மீண்டும் பேய்ப் பயம் ஊட்ட வருகிறது பீட்சா 3.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் பகிர்ந்த ஆயிரத்தில் ஒருவன் பேன்மேட் போஸ்டர்!