பிரபல சினிமா பாடகரின் மகளைக் காணவில்லை ... போலீஸில் புகார் !

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (17:24 IST)
பிரபல நாட்டுப்புற பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் திடீரென காணமால் போனதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல நாட்டுப்புற கலைஞர் மற்றும் சினிமா பின்னனி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியினர் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியரின் மகள் பல்லவி மருத்துவத்துப் படிப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில், அபிராமி புரத்தில் உள்ள காவல் நிலையத்தில், புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் ஒரு புகார் அளித்துள்ளார்.
 
அந்தப் புகாரில், புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை, நேற்று இரவில் வீட்டில் சிறிய வாக்குவாதம் நடைபெற்றதாகவும், அந்த கோபத்தில், பல்லவி வீட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றவர் வீட்டுக்கு மீண்டு திரும்பவில்லை. அதனால் விரைவில் கண்டுபிடித்துத் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒத்திவைக்கப்பட்ட ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பாலையா ரசிகர்கள் குஷி..!

நிவேதா பெத்துராஜ் திருமணம் நிறுத்தப்பட்டதா? காதலர் இன்ஸ்டா பக்கத்தை அன்ஃபாலோ செய்ததால் பரபரப்பு..!

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments