Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க போகிறேன்! மாஸ் நடிகரின் அறிவிப்பு!

ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க போகிறேன்! மாஸ் நடிகரின் அறிவிப்பு!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:33 IST)
தெலுங்கு மாஸ் நடிகரான பவன் கல்யாண் ஒரே நேரத்தில் 15 படங்களை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அமிதாப் மற்றும் டாப்ஸீ நடித்த பிங்க் திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் கடந்த ஆண்டு ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் கிடைத்தது.

இதையடுத்து 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் பவன் கல்யாண் அந்த படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி அந்த படம் ரிலிஸாக உள்ள நிலையில் விளம்பர நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு நிறுவனத்துடன் இணைந்து 15 படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸுடன் இணையும் இளம் தமிழ் இயக்குனர்!