Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

14 ஆண்டுகளை நிறைவு செய்த பருத்தி வீரன்! சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

14 ஆண்டுகளை நிறைவு செய்த பருத்தி வீரன்! சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
, புதன், 24 பிப்ரவரி 2021 (08:30 IST)
கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தைப் பார்த்து பிரமித்துப் போன பாரதிராஜா ‘என்னை எல்லோரும் கிராமிய இயக்குனர் என்கின்றனர். ஆனால் என்னால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன்’ எனக் கூறி பாராட்டினார்.

இந்த படத்துக்கு பிறகு அமீர் ஆதிபகவன் என்ற ஒரே ஒரு படம்தான் இயக்கினார். அதுவும் தோல்வி படமாக அமைந்தது. ஆனால் படத்தின் கதாநாயகனாக கார்த்தி இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மறந்தாலும், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் விலை உயர்வைக் கிண்டல் அடித்த சிவகார்த்திகேயன்… ஆனால் இப்போ இல்லை!