Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஞ்சித்தின் சல்பேட்டா பரம்பரை படப்பிடிப்பில் சிக்கல்! குழப்பத்தில் படக்குழு!

ரஞ்சித்தின் சல்பேட்டா பரம்பரை படப்பிடிப்பில் சிக்கல்! குழப்பத்தில் படக்குழு!
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:25 IST)
பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்திற்காக போடப்பட்ட செட்கள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் சல்பேட்டா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இதற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் ஆர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் இயக்குனர் பா ரஞ்சித் படமாக்கி முடித்துவிட்டாராம்.

மீதமுள்ள சில காட்சிகளைப் படமாக்குவதற்குள் சென்னையில் கனமழை பெய்து வருவதால் படத்துக்காக போடப்பட்ட செட்கள் நனைந்து முழுவதும் நாசமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் செட்களைப் போட்டு படம் எடுப்பதா என்ற யோசனையில் படக்குழு உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரரைப் போற்று திரைப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்கள்! தெறிக்கும் வசனங்கள்!!