Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே ஒரு ஓவியா ஒன்பது பேரை வீட்டுக்கு அனுப்ப போகுது!

Advertiesment
ஒரே ஒரு ஓவியா ஒன்பது பேரை வீட்டுக்கு அனுப்ப போகுது!
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (00:15 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிந்துமாதவியை சேர்த்து பத்து பேர் இருக்கின்றனர். ஆனால் இந்த பத்து பேரில் ஒன்பது பேர் ஒரு அணியாகவும், ஒவியா மட்டும் தனியாக ஒரு அணியாகவும் இருப்பது போல் தோன்றுகிறது.



 
 
உண்மையில் இந்த ஒன்பது பேருக்கு பைத்தியாமா? அல்லது ஓவியாவுக்கு பைத்தியமா? என்பது மட்டுமே தற்போது கேள்வியாக உள்ளது.
 
பதிமூன்று பேர் சேர்ந்து பரணியை ஓட ஓடி விரட்டி அடித்தனர். ஆனால் இப்போது ஒரே ஒரு ஓவியாவை இந்த ஒன்பது பேர்களால் சமாளிக்க முடியவில்லை.
 
இன்று சக்தி மற்றவர்களிடம் கூறும்போது, சனிக்கிழமை ஓவியா வெளியே போகவில்லை என்றால் கிளினிங் இல்லை, சாப்பாடு இல்லை எதுவுமே இல்லை. அல்லது நாங்கள் ஒன்பது பேரும் வெளியே போக வேண்டியதுதான் என்று கூறுகிறார். ஒருவேளை ஓவியாவை சமாளிக்க முடியாமல் ஒன்பது பேரும் வெளியேறினால் அடுத்த வாரமே ஓவியா வின்னர் ஆகிவிடவும் வாய்ப்பு உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் யாருக்கும் ரெண்டாவது சான்ஸ் தரமாட்டேன்: ஓவியா