Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று பேர் மட்டுமே நடிக்கும் ‘ஆக்சிஜன்’

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (18:09 IST)
மூன்றே பேர் மட்டுமே நடிக்கும் ‘ஆக்சிஜன்’ என்ற படம் தயாராகி வருகிறது.

 
தன்னுடைய முதல் படமான ‘மெட்ரோ’விலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன். கிரைம் திரில்லரான இந்தப் படத்தில், சிரிஷ் ஹீரோவாக நடித்தார். செயின் பறிப்பு சம்பவங்கள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை டீட்டெயிலாகச் சொல்லி, எல்லோருக்கும் எச்சரிக்கை மணி அடித்தது இந்தப் படம்.
 
இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார் ஆனந்த் கிருஷ்ணன். அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஆக்சிஜன்’ எனத் தலைப்பு வைத்துள்ளார். தலைப்பைப் பார்த்து இது சுற்றுச்சூழல் சார்ந்த படம் என நினைத்துவிட வேண்டாம். 
 
இதுவும் கிரைம் சார்ந்த படம்தான். நேர்மையாக வாழ்பவர்கள்தான் இந்த உலகத்தின் ஆக்சிஜன் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.
 
இந்தப் படத்தில் அசோக் செல்வனைத் தவிர, இன்னும் இரண்டு பேர் மட்டுமே நடிக்கின்றனர். ஒருவர் யோகிபாபு, இன்னொருவர் யார் என்பதைத் தேடி வருகிறார் ஆனந்த் கிருஷ்ணன்.

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments