Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு "திருக்குறள்"பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்!

J.Durai
வியாழன், 3 அக்டோபர் 2024 (08:46 IST)
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ், என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
நிறைவு பணி நிறைவடைந்த நிலையில் திரைப்படம் திரையிடலுக்கு ஆயத்தமாகி உள்ளது.
 
இந் நிலையில் மகாத்மாகாந்தி பிறந்தநாள், மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு  சென்னை தி.நகரில் அமைந்துள்ள காமராஜர் இல்லத்தில் திருக்குறள் திரைப்பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
 
காமராஜ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந் நிகழ்வில் திருக்குறள் திரைப்படத்தின் பணியாற்றிய நடிகை நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments