Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏறி மிதித்து போய்கிட்டே இருப்போம்: அடிக்கல் நாட்டு விழாவில் விஷால் பேச்சு!

ஏறி மிதித்து போய்கிட்டே இருப்போம்: அடிக்கல் நாட்டு விழாவில் விஷால் பேச்சு!
, வெள்ளி, 31 மார்ச் 2017 (12:28 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடதுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை நடிகர் சங்க வளாகத்தில்  நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிறகு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது, 2018 செப்டம்பரில்  நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும். 

 
இந்த கட்டிடத்திற்காக நானும் கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி அளித்துள்ளோம். ரஜினி, கமல் ஆகியோர் இன்று பிற்பகல்  இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடத்தால் நலிந்த கலைஞர்கள் பலனடைவார்கள். எங்களை இனிமேல்  யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு, ஆதரவு  தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்!