Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் அதிரடி முடிவால் விஜய் அதிர்ச்சி

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (00:39 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினமான அக்டோபர் 18 முதல் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படம் இன்னும் ஓரிரு நாட்களில் சென்சார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



 
 
இந்த நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் வெள்ளி முதல் அதாவது அக்டோபர் 6 முதல் எந்த புதிய திரைப்படங்களும் ரிலீஸ் செய்யப்பட மாட்டாது என்று விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு மேலும் 10% கேளிக்கை வரிகள் தமிழ்ப்படங்களுக்கும், 20% பிறமொழி படங்களுக்கும் விதித்துள்ளதை எதிர்த்தே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 'மெர்சல்' திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments