Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் எப்போதும் எனக்கு சவாலான கதாபாத்திரங்களையே தருகிறார்… நித்யா மேனன்!

தனுஷ் எப்போதும் எனக்கு சவாலான கதாபாத்திரங்களையே தருகிறார்… நித்யா மேனன்!

vinoth

, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (14:25 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நித்யா மேனன் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருது பெற்ற நிலையில் இதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

இந்த படம் குறித்து தற்போது பேசியுள்ள அவர் “திருச்சிற்றம்பலம் படத்துக்காக என்னுடைய கம்போர்ட் ஸோனில் இருந்து நான் வெளிவரவேண்டி இருந்தது. இப்போது இட்லி கடை படத்தில் அது 200 மடங்காக ஆகியுள்ளது. இதுவரை யாரும் என்னைக் காட்டாத கதாபாத்திரத்தில் தனுஷ் என்னைக் காட்டவுள்ளார். எப்போதும் அவர் எனக்கு சவாலானக் கதாபாத்திரங்களையே தருகிறார்.” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை ராதிகா ஆப்தே… குவியும் வாழ்த்துகள்!