Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நித்யா மேனன்!

vinoth
புதன், 9 அக்டோபர் 2024 (19:08 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் நித்யா மேனன். தேசிய விருது பெற்ற பின்னர் பேசிய அவர் “இந்த விருதை திருச்சிற்றம்பலம் படக்குழுவினரோடு பகிர்ந்து கொள்கிறேன். தனுஷுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? ரவீந்தருக்கு தான் அதிகமா?

சீரியல் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா.. வாய்ப்பு கிடைக்கவில்லையா?

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி: தமிழக அரசு அனுமதி

அமிதாப் முதல் பென்ச் மாணவன்… ரஜினிகாந்த் கடைசி பென்ச் மாணவன் – இயக்குனர் ஞானவேல்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம?

அடுத்த கட்டுரையில்
Show comments