அஜித்தின் அடுத்த படத்தில் நிக்கி கல்ராணி?

Webdunia
வியாழன், 9 மே 2019 (22:37 IST)
அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை அடுத்து இயக்குனர் எச்.வினோத் மீண்டும் அஜித் படத்தை இயக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
 
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான நட்சத்திர தேர்வு தொடங்கிவிட்டதாகவும், இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பதாலும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதாலும், இந்த படத்தின் நாயகியாக பெரிய நடிகை தேவை இல்லை என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
 
அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க நிக்கி கல்ராணி மற்றும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் நிக்கி கல்ராணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யாராயும் நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.
 
'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments