Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவுக்கு ஆந்திராவில் படமும் இல்லை அறையும் இல்லை

நயன்தாராவுக்கு ஆந்திராவில் படமும் இல்லை அறையும் இல்லை

நயன்தாராவுக்கு ஆந்திராவில் படமும் இல்லை அறையும் இல்லை
, திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (11:12 IST)
அனாமிகா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.


 


இரண்டு வருடங்கள் தெலுங்குப் படம் எதுவும் இல்லாமலிருந்தவர், சமீபத்தில் பாபு பங்காரம் என்ற படத்தில் நடித்தார். அதன் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அதனால், தெலுங்குப் படங்களில் அவரை கமிட் செய்ய ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கிறார்கள்.

இந்நிலையில், ஆந்திராவிலுள்ள ஸ்டார் ஹோட்டல்கள் நயன்தாராவுக்கு அறை கொடுக்க தயங்குவதாக பாபு பங்காரம் யூனிட் அதிர்ச்சி தகவல் ஒன்றை கசியவிட்டுள்ளது. பாபு பங்காரம் படத்தின் போது நயன்தாரா தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் அவர் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். சில பொருட்களை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவருக்கு அறை கேட்டால் ஸ்டார் ஹோட்டல்கள் அறை தர தயங்குகிறார்களாம்.

கோபம் குறைய குளிர்ந்த நீரில் குளிக்கலாம், கல்யாணமும் பரிகாரமாகும்.

 



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு