Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பிய நயன்தாரா… அட்லி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பு!

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பிய நயன்தாரா… அட்லி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பு!
, திங்கள், 27 ஜூன் 2022 (11:30 IST)
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிக்கும் படத்துக்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் ஐதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் திருமணம் முடிந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சந்திரமுகி 2’ படத்தில் த்ரிஷாவா? ஆச்சரிய தகவல்!