Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வாக்குள்ள 50 இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா

Advertiesment
செல்வாக்கு
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (10:48 IST)
2018-ம் ஆண்டின் செல்வாக்குள்ள 50 இளம் இந்தியர்கள் பட்டியலை ஜிகியூ என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
40 வயதுக்குள் பொழுதுபோக்கு, விளையாட்டு, வியாபாரம் உள்பட பல்வேறு துறைகளில் மக்களை கவர்ந்த செல்வாக்கான நபர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழும் 33 வயதான நடிகை நயன்தாரா இடம் பெற்று  உள்ளார். தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக (ரூ.6 கோடி) உள்ளார்.
 
இந்த பட்டியலில் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் இயக்குனர் பா. ரஞ்சித் இடம் பெற்றுள்ளார். இதேபோல் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மலையாள நடிகை பார்வதியும் இடம் பெற்றுள்ளார். இத்துடன் நடிகைகள் டாப்சி, அலியாபட், இந்திய  கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு செக் வைத்த விஷ்ணு விஷால் – முழிக்கும் திரையரங்க உரிமையாளர்கள்