Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தது வருத்தமாக இருந்தது- நவாஸுதின் சித்திக் கருத்து!

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தது வருத்தமாக இருந்தது- நவாஸுதின் சித்திக் கருத்து!

vinoth

, சனி, 17 பிப்ரவரி 2024 (10:44 IST)
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கி தனது அசுரத்தனமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர். ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் நவாசுதீன். தமிழில் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

ஆனால் அந்த படத்தில் தன்னுடைய நடிப்பு தனக்கே பிடிக்கவில்லை என நவாசுதீன் சித்திக் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “நான் அந்த படத்தில் நடித்த பின்னர் மிகவும் வருத்தமடைந்தேன். ஏனென்றால் நான் அந்த படத்தில் என்ன செய்கிறேன் என்பதே எனக்கு தெரியவில்லை. நான் வெறுமனே வாயசைத்துவிட்டு வந்துவிட்டேன்.

நான் ஒன்றுமே செய்யாத விஷயத்துக்காக பணம் பெற்றுக்கொண்டதாக உணர்ந்தென். நான் அவர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிட்டேன்.  அங்கு நடந்த விஷயங்கள் பல எனக்கு புரியவில்லை” என்று கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது… அடுத்தடுத்து இரண்டு படங்களில் ரஜினியோடு நடிக்கும் லாரன்ஸ்!