Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: திருப்பதி நடிகை நமீதா பேட்டி!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (12:08 IST)
நடிகை நமீதாவுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்ததால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். இந்த நிலையில் திருப்பதி வந்த நடிகை நமீதா விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்
 
நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர செளத்ரியுடன் இன்று திருப்பதி வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்த பிறகு அவருக்கு தீர்த்த பிரசாரங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்
 
இதனை அடுத்து அவர் நிருபர்களிடம் பேசியபோது ’திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எனது குழந்தைகள் நலமாக உள்ளனர் என்றும் எனது குழந்தைகளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் எதிர்காலத்தில் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என்றும் ஆனால் அரசியலில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் நடிகை நமீதா தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் அரசியலில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments