Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் வார்த்தையைக் கேட்காமல் தாணு செய்த செயல்…. நானே வருவேன் ப்ரமோஷனில் கலந்துகொள்ளாத காரணம்!

Advertiesment
தனுஷ் வார்த்தையைக் கேட்காமல் தாணு செய்த செயல்…. நானே வருவேன் ப்ரமோஷனில் கலந்துகொள்ளாத காரணம்!
, வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:24 IST)
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் கடந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக படத்துக்கு மிகப்பெரிய வசூல் இல்லை. ஆனால் அந்த படம் அதனளவில் போதுமான வசூலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத் தயாரிப்பாளர் தாணுவிடம் தனுஷ் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் போது இந்த படத்தை ரிலீஸ் செய்யவேண்டாம் எனக் கூறியதாகவும், அதைக் கேட்காமல் தாணு ரிலீஸ் செய்ததால்தான் பட ப்ரமோஷன்களில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவை அடுத்து பாடகராகவும் மாறிய சந்தானம்!