Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூர் மாளிகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (16:49 IST)
வடிவேலுவின் ரி எண்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் காட்சிகள் மைசூர் மாளிகையில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக  அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் ஆரம்ப கால பாடல்கள் மற்றும் நடனம் வெகு பிரசித்தி பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள பாடல் மற்றும் நடனம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் வடிவேலு மற்றும் நாய்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினர் இப்போது மைசூர் அரண்மணைக்கு சென்று முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி வடிவேலு மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதால் மாளிகை போன்ற அரண்மணையை அவரின் வீடுபோல காட்டி படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments