Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைனிலிருந்து திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை!

உக்ரைனிலிருந்து திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை!
, சனி, 26 பிப்ரவரி 2022 (14:34 IST)
உக்ரைனிலிருந்து மும்பை திரும்புவோர் கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் . 

 
உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5,000 பேர் உள்ளனர். 
 
இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்கப்பட உள்ளது. அதன்படி ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என ஏர் இந்தியா தெரிவித்தது.
 
இதனிடையே ரோமனியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம், உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்களுடன் புறப்பட்டது. அந்த விமானம் இன்று மாலை 4 மணிக்கு மும்பை தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உக்ரைனிலிருந்து மும்பை திரும்புவோர் கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மும்பை விமான நிலையம் அறிவித்துள்ளது. RTPCR சோதனைக்கான கட்டணத்தை விமானநிலையமே ஏற்கும் எனவும், கொரோனா இல்லை என வந்த பிறகே இந்தியர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர் எனவும் மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3,500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - உக்ரைன் ராணுவம்!