Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தொடங்கும் மிஷ்கினின் ட்ரெய்ன் படத்தின் ஷூட்டிங்!

மீண்டும் தொடங்கும் மிஷ்கினின் ட்ரெய்ன் படத்தின் ஷூட்டிங்!

vinoth

, செவ்வாய், 30 ஜூலை 2024 (08:39 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்துக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக சென்னை மற்றும் மேட்டுப்பாளையத்தில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது இறுதிகட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமரன் படத்துக்காக முகுந்த் வரதராஜனின் குடும்பத்துக்கு கமல்ஹாசன் கொடுத்த ராயல்டி!