Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தந்தை கையில் ‘தம்ஸ் அப்’ செய்து காட்டினார் - எஸ்.பி.பி, சரண் உருக்கம்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (21:39 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக சீராக இருந்துவரும் நிலையில் இன்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 

சற்று முன் வெளியான அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகவும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அவரது உடலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவித்துள்ளது

இந்த நிலையில் இன்று காலை திடீரென எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் செய்திகள் வெளியானது ஆனால் இந்த செய்தியை எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , எஸ்பிபி சரண் தற்போது வெளியிட்டுள செய்தியில், என் தந்தை எஸ்.பி.பி-ஐ 2 வாரத்திற்கு பிறகு இன்று சந்தித்தேன். அவர் சைகையில் என்னிடம் தம்ப்ஸ் அப் காட்டினார் என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments