Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘என் மகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்’ - பிரபல நடிகையின் அம்மா வேண்டுகோள்

‘என் மகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்’ - பிரபல நடிகையின் அம்மா வேண்டுகோள்
, வெள்ளி, 10 மார்ச் 2017 (15:15 IST)
‘என் மகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்’ என பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
முன்னணி பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, 2015ஆம் ஆண்டு ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க டிவி தொடரில்  நடித்தார். தொடர்ந்து, ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட்டின் மற்றுமொரு முன்னணி  நடிகையான தீபிகா படுகோனே, ‘ட்ரிபிள் எக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். இருவருமே ‘பாஜிராவ் மஸ்தானி’ ஹிந்திப்  படத்திலும் நடித்துள்ளனர். இதனால், இருவரையும் ஒப்பிட்டு பலரும் பேசி வருகின்றனர். 
 
இந்த நிலையில், ‘என் மகளை யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். என் மகளுக்கு சமமானவர்கள் இங்கு யாரும் கிடையாது.  அவள் தனித்துவம் மிக்கவள். தன்னுடைய வேலையை சிறப்பாகச் செய்பவள்’ என தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ராவின்  தாயார் மது சோப்ரா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு முகத்துக்கும் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த விஜய்