Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிக்குப் பின் அல்லு அர்ஜூன் – முருகதாஸ் ப்ளான் !

Advertiesment
ரஜினிக்குப் பின் அல்லு அர்ஜூன் – முருகதாஸ் ப்ளான் !
, வெள்ளி, 8 மார்ச் 2019 (11:30 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ரஜினிப் படத்திற்கு பின்னர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் நேரடிப் படங்களை இயக்கியுள்ளார். மூன்று மொழிகளிலுமே மிகப் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். அதிலும் ஹிந்தியில் அவர் இயக்கிய கஜினி திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று மொழிகளிலும் மாறி மாறி படங்களி இயக்கி வரும் முருகதாஸ் இப்போது ரஜினியை வைத்து இயக்கும் தனது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்திற்கு பின்னர் அவர் விஜய் நடிக்கும் துப்பாக்கி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் மற்று தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் என்ற படத்தையும் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் எனும் படத்தையும் முருகதாஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மொழிகளில் வெளியாகும் விஜய் படம்: டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு