Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயர் கிடைக்கலையே நாராயணா...

பெயர் கிடைக்கலையே நாராயணா...
, வியாழன், 2 மார்ச் 2017 (11:27 IST)
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் இருமொழிப் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டனர். ஆனால் இன்னும் பெயர்தான் அகப்படவில்லையாம்.



அகிரா இந்திப் படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். ராகுல் ப்ரீத் சிங் நாயகி, எஸ்.ஜே.சூர்யா வில்லன். ஜுன் 23 ரம்ஜானுக்கு படம் வெளியாகும் என்று ஏற்கனவே முருகதாஸ் அறிவித்தார். ஆனால், இதுவரை படத்துக்கு பெயர் வைக்கவில்லை.

தெலுங்கு, தமிழ் இருமொழிக்கும் பொதுவான பெயராக தேடி வருகிறார்கள், அதனால்தான் தாமதம். தெலுங்கு, தமிழ் இரண்டுக்கும் சேர்த்து ஆங்கிலத்தில் ஏதாவது பெயர் வைக்கலாம். ஆனால், இது நேரடித் தமிழ்ப் படமாக கூறப்படுவதால் ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் 30 சதவீத வரிச்சலுகையை இழக்க நேரிடும், அதனால்தான் இந்த குழப்பம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதியுடன் மோத நயன்தாரா முடிவா?