Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறப்பது எப்போது? வெளியான தகவல்!

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறப்பது எப்போது? வெளியான தகவல்!
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:50 IST)
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் மல்டிப்ளக்ஸ் திரைகள் இந்த வார இறுதியில்தான் திறக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மற்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், ஜிவி பிரகாஷின் ஜெயில், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் மற்றும் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முதல் தனித்திரையரங்குகள் மட்டுமே திறக்கப்படும் என்றும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இந்த வார இறுதியில் மட்டுமே ரிலிஸாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச ரிலீஸ் ப்ளான் செய்யும் ஹன்சிகாவின் அடுத்த படம்!