Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

vinoth
சனி, 29 மார்ச் 2025 (14:21 IST)
நடிகர்பிருத்விராஜ், மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதன் இரண்டாம் பாகம் தற்போது ‘எம்புரான்’ என்ற பெயரில் கடந்த 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 350 திரைகளில் ரிலீஸானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு மலையாளப் படமும் இத்தனை அதிக எண்ணிக்கையில் ரிலீஸானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரிலீஸான பின்னர் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை மற்றும் மேக்கிங் காரணமாக கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கியுள்ளது.

ஆனாலும் எதிர்பார்ப்பின் காரணமாக நடந்த முன்பதிவு மற்றும் மோகன்லாலுக்கான ரசிகர் கூட்டம் ஆகியவற்றின் மூலம் படம் இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் மலையாள சினிமாவில் 2 நாளில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments