கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

vinoth
வெள்ளி, 28 மார்ச் 2025 (11:33 IST)
நடிகர் பிருத்விராஜ், தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதன் இரண்டாம் பாகம் தற்போது ‘எம்புரான்’ என்ற பெயரில் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 350 திரைகளில் ரிலீஸானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு மலையாளப் படமும் இத்தனை அதிக எண்ணிக்கையில் ரிலீஸானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரிலீஸான பின்னர் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை மற்றும் மேக்கிங் காரணமாக கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் எம்புரான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் நேற்று 22 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மோகன்லாலின் திரை வாழ்க்கையில் இதுதான் அதிகபட்ச முதல் நாள் வசூல் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments