Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃப்ளாப் கொடுத்தும் அழைத்த சிவகார்த்திகேயன்… ஆனால் கண்டுகொள்ளாத இயக்குனர்!

ஃப்ளாப் கொடுத்தும் அழைத்த சிவகார்த்திகேயன்… ஆனால் கண்டுகொள்ளாத இயக்குனர்!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:21 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் திரைப்படம் பயங்கர எதிர்பார்ப்போடு வெளியானது.

ரீமேக் படங்களாக இயக்கிக் கொண்டிருந்த மோகன் ராஜா தனி ஒருவன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படத்தினை இயக்கினார். இந்த படத்தை இருவரின் மார்க்கெட்டை விட அதிக தொகை செலவு செய்து தயாரித்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மோகன் ராஜாவுக்கு படங்கள் இயக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனோ அவரிடம் ‘நாம் மீண்டும் ஒரு படத்தில் இணையலாம். அந்த படம் வெற்றிப்படமாக அமையும் எனக் கூறியுள்ளார்.’ ஆனால் மோகன் ராஜா அவருக்கு சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாமல் விட்டுள்ளார். அதன் பின்னர்தான் அந்தாதூன் ரீமேக்கை இயக்க சென்றார். ஆனால் அதன் பின் அந்த படத்தில் இருந்தும் வெளியேறி இப்போது தெலுங்கு லூசிபர் படத்தை இயக்கி வருகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… கதை சொல்லி சம்மதம்!