Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்!

பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்!
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:51 IST)
நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் நடித்த ‘மிரள் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், தெரிவித்துள்ளார். இப்போது அவர் முழுமையாக குணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட் நியஸ்... ஹேப்பியான போட்டோ வெளியிட்டு வாழ்த்து மழையில் மகாலக்ஷ்மி!