Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 21 March 2025
webdunia

விஜய் மனைவியை அவதூறாக பேசிய மீரா மிதுன் கைது? பரபரப்பு தகவல்!

Advertiesment
விஜய் மனைவியை அவதூறாக பேசிய மீரா மிதுன் கைது? பரபரப்பு தகவல்!
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (15:20 IST)
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக திரையுலக நட்சத்திரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகிறார்.அதிலும்  குறிப்பாக  விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியது.

இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச வார்த்தையால் திட்டுவதாகவும், இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் என சில ஆபாசமான வார்த்தைகளை சொல்லி வெளிப்படையாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து மீரா மிதுன் அத்துமீறிய பேச்சுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு திரைப்பிரபலங்களும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில்  விஜய் ரசிகர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே விரைவில் மீரா மிதுன் கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ25 லட்சம் நிதியுதவி!