Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலா நாட்டுக்குச் செல்ல ஆசைப்படும் மீரா மிதுன்…விஜய் ரசிகர்கள் உதவ தயார் என டுவீட்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:00 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. அதன் பின்னர் தொடர்ந்து ஏதாவது சர்ச்சையாக பேசி சீப்பான பப்ளிசிட்டி தேடி வரும் மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யாவை குறித்து அவதூறு பேசி அனைவரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் மீரா மிதுன் எந்த பிரச்னையும் வேண்டாம்டா சாமி என்று நித்தி பக்தியாக கைலாசவிற்கு கிளம்பி செல்ல திட்டமிட்டுள்ளாராம். அவருக்கு நித்யானந்தா தரப்பில் இருந்து அழைப்பு வந்துவிட்டால். அன்று இரவே பொட்டி படுக்கையோடு கிளம்பிடுவார். இதற்கு முன்னர் கூட பேட்டி ஒன்றில் நித்யானந்தாவிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் என்ன சொல்லுவீங்க என்ற கேள்விக்கு ' கண்டிப்பா போவேன் என்றார். ஆனால், அவர் வெர்ஜின் பெண்களை மட்டும் தான் சேர்த்துக்கொள்கிறார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  நித்தியானந்தாவின் கைலாசா தீவிற்கு நீ போவதாக இருந்தால் வழிச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவத் தயார் என விஜய் ரசிகர்கள் அவருக்குப் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments