Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை மீரா மிதுன் மீதான 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நடிகை மீரா மிதுன் மீதான 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
, வியாழன், 2 செப்டம்பர் 2021 (13:10 IST)
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமீன் தாக்கல் செய்தால், ஆனால அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
 
பின்னர், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஜோ மைக்கேல் என்பவர் தொடந்துள்ள வழக்கில் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பிரபல நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவுடன் இணைந்த பா. ரஞ்சித் - இனி சந்தோஷ் நாராயணன் அவ்ளோவ்தானா?