Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க… கேரளாவில் கைதானா மீரா மிதுன்!

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க… கேரளாவில் கைதானா மீரா மிதுன்!
, சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:26 IST)
பட்டியலின சினிமாக் கலைஞர்கள் குறித்து தவறாக பேசிய நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி மீரா மிதுன் “தாராளமாக என்னை கைது செய்யுங்கள்... ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?. என்னையெல்லாம் கைது செய்ய முடியாது” என பேசி மீண்டும் கோபத்துக்கு ஆளானார். இந்நிலையில் இன்று மீரா மிதுன் கேரளப் போலிஸாரின் உதவியோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்? சர்ப்ரைஸ் அப்டேட்!