Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பு: புதிய தகவல்

விஜய் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பு: புதிய தகவல்
, வியாழன், 6 பிப்ரவரி 2020 (21:30 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி போதும் ஆக்ரோஷமான கிளைமாக்ஸுக்கு முந்திய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது 
 
இந்த நிலையில் திடீரென நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலி சென்று படப்பிடிப்பில் இருந்த விஜய்யை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் விஜய் இல்லாவிட்டாலும் விஜய் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்று வருவதாகவும் விஜய் வந்தவுடன் அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படப்பிடிப்பு குழுவினரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த மாதம் வெளியாகும் சந்தானம் படத்தின் டைட்டில் இதுதான்!