Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷை சந்திக்க லண்டன் பறந்த ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர்!

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (09:26 IST)
’பரியேறும் பெருமாள்’ என்ற ஒரே படத்தில் பெரும் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்த படத்திற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து விட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’கர்ணன்’என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது 
 
 
மேலும் தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை ரஷிசா விஜயன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தனுஷிடம் நேரடியாக விவாதிக்க இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது லண்டன் சென்றதாகவும் அங்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷிடம் அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் தனுஷிடம் ஆலோசனை பெற்ற பின்னர் அவர் மீண்டும் சென்னை திரும்பி படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் லண்டனில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
 
 
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் வரும் நவம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments