Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“ஓடிடி என்பது நூலகம் போன்றது… அதனால் தியேட்டர் பாதிக்கப்படாது” – மாரி செல்வராஜ் பதில்!

“ஓடிடி என்பது நூலகம் போன்றது… அதனால் தியேட்டர் பாதிக்கப்படாது” – மாரி செல்வராஜ் பதில்!

vinoth

, திங்கள், 3 ஜூன் 2024 (07:32 IST)
தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள், ‘கர்ணன்’ மற்றும் ‘மாமன்னன்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது வாழை என்ற படத்தை இயக்கிமுடித்துள்ள அவர் அடுத்து இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அவரிடம் ஓடிடிகளின் வருகையால் திரையரங்கத்துக்கு ரசிகர்கள் வருவது குறையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “எல்லோர் வீட்டிலும் சாமி படம் உள்ளது. அதனால் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

அதுபோலதான் ஓடிடியும். ஓடிடி என்பது ஒரு நூலகம் போன்றது. அதில் நாம் ஏற்கனவே பார்த்த படங்களை எல்லாம் திரும்ப பார்த்துக் கொள்ளலாம். பார்க்காத படங்களையும் பார்த்துக் கொள்ளலாம். அதனால் தியேட்டர் வியாபாரம் பாதிக்கப்படாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படத்தின் ரிலீஸ் எப்போது?