Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏன் வைரமுத்து இல்லை…” மணிரத்னம் அளித்த பதில்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:59 IST)
மறைந்த எழுத்தாளர் கல்கி 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ரோஜா திரைப்படத்துக்கு பிறகு முதல் முறையாக இயக்குனர் மணிரத்னம் வைரமுத்து பாடல் எழுதாமல் இயக்கியுள்ளார். இதற்கு வைரமுத்து மீது எழுந்த மீ டு குற்றச்சாட்டுகளே காரணம் என்று கிசுகிசுக்கள் எழுந்தன. இந்நிலையில் இதைப் பற்றி இயக்குனர் மணிரத்னத்திடம் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

அதற்கு மணிரத்னம் “வைரமுத்துவோடு ஏற்கனவே பல படங்களில் பணியாற்றிவிட்டோம். புதிய திறமையாளர்களோடு ஒரு படம் பண்ணலாம் என்றுதான் இந்த முடிவு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

மகாராஜா பட இயக்குனரை சந்தித்து பாராட்டிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்!

நம்ப முடியாத அளவுக்கு எளிமையானவர் அஜித்… சந்திப்பு குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!

இந்தியன் 2 டிரைலர்ல இத கவனீச்சிங்களா?... மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments