Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 படத்திலும் ஒரு ‘ஊ சொல்றியா’ பாட்டு… ஆடப்போவது இவர்தான்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:42 IST)
புஷ்பா 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. முதல் பாகத்தில் நடிக்காத பலர் இந்த பாகத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தில் சமந்தா நடனத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதுபோல ஒரு பாடல் உள்ளதாகவும், அந்த பாடலில் பாலிவுட் நடிகை மலைகா அரோரா நடனமாட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments