தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு டாக்டர் மற்றும் விஜய்யோடு பீஸ்ட் மற்றும் ரஜினியோடு ஜெயிலர் என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
தற்போது கோயம்புத்தூரில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த பாகத்தில் மலையாள நடிகர்களான பஹத் பாசில், சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் சுஜித் சங்கர் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.