Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Siva
வெள்ளி, 17 மே 2024 (08:02 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மதுரை மதிச்சியம் என்ற பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மழை காரணமாக அவருடைய வீட்டின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே பாலசுப்ரமணியம் சிக்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மழை காலத்தில் மழை பெய்யும் நேரத்தில் ஆபத்தான இடங்களில் தங்க வேண்டாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறித்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹெட்போன்ல பாட்டுக் கேக்காதீங்க.. கேட்கும் திறனை இழந்த பாடகி! – ரசிகர்களுக்கு அறிவுரை!

பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை!

நடிகை ப்ரீத்தி முகுந்தன் அறிமுகப்படுத்திய “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0”

ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் "ராக்கெட் டிரைவர்"

பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”

அடுத்த கட்டுரையில்
Show comments