Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில்லன் வேடத்தில் நானா? மாதவன் எடுத்த முடிவால் ஆதிக்கு கிடைத்த வாய்ப்பு!

வில்லன் வேடத்தில் நானா? மாதவன் எடுத்த முடிவால் ஆதிக்கு கிடைத்த வாய்ப்பு!
, சனி, 12 ஜூன் 2021 (15:07 IST)
ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அதன்பின் ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது .இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக உப்பேன்னா படத்தில் நடித்திருந்த கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ் விக்ரம்& மாரி செல்வராஜ் கூட்டணி இப்போது இல்லையா?