Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கதைகள் வந்தால் 5 கதைகள் சூரி அண்ணனுக்குதான்… லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்!

vinoth
புதன், 7 மே 2025 (11:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படம் மே மாதம் 16 ஆம் தேதி ரிலீஸாகிறது.

படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “ நான் ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து சின்ன படங்களாகத் தயாரிக்கலாம் என நினைத்தேன். அதில் 10 கதைகள் வந்தால் ஐந்து கதைகள் சூரி அண்ணனுக்காகதான் வருகின்றன. அந்தளவுக்கு அவரின் வளர்ச்சி உள்ளது.  எல்லோருக்கும் பிடித்தமான ஒரு நடிகராக சூரி அண்ணன் வளர்ந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments