Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட நடிகர் மாதவன்!

மகனின் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட நடிகர் மாதவன்!
, புதன், 7 ஜூன் 2017 (14:50 IST)
தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். நீண்ட இடைவேளைக்கு பிறகு  இறுதிச்சுற்று படத்தின் மூலம் மாதவன் தான் விட்ட இடத்தை தமிழில் பிடித்துவிட்டார். தற்போது, ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது தான் தன் மகன் குறித்து முதன்  முறையாக பேசியுள்ளார். தன் மகன் நீச்சல் போட்டியில் மாநில அளவில் சாம்பியனாகவும், அடுத்த வாரம் இந்திய அளவில் நடக்கும் போட்டியிலும் கலந்துக்கொள்ளவார் என கூறினார். அப்படி அவர் பேசும் போது உடனே அங்கிருக்கும் தொலைக்காட்சியில் மாதவனின் மகன் தோன்றி பேச, மாதவன் ஒருக்கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“அரவிந்த் சாமியால் எனக்கு வருத்தம் இல்லை” – நட்டி